Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரசியல் கிளர்ச்சிக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

அரசியல் கிளர்ச்சிக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி

1 minutes read

நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கிளர்ச்சி ஒன்றை செய்ய தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரரை ஆரம்பித்து வைத்து தனது சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

சுதந்திரக் கட்சி இப்படியான அரசியல் நடவடிக்கையை எடுத்தால், அன்றைய தினமே அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கும் நிலைமை ஏற்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More