எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அல்லது நாட்டிலுள்ள ஏனைய விமான சேவைகளை பாதிக்காது என விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் வாரமளவில் 32மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தி தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் கையிருப்பில் ஒன்றரை மாதத்திற்கு தேவையான எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.