மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள நெடுஞ்சேனை பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றில் கஞ்சா செடியை பயிரிட்டு அதனை வெட்டி மறைத்துவைத்திருந்த ஒருவரை நேற்று புதன்கிழமை (19) கைதுசெய்ததுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று குறித்த பண்ணையை பொலிசார் முற்றுகையிட்டு அங்கு மறைத்துவைத்திருந்த கஞ்சா செடியுடன் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.