Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு இயந்திரத்துடன் கைது

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் உழவு இயந்திரத்துடன் கைது

1 minutes read

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளம் ஆற்றுப் பகுதியில்  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது தொடர்பாக விசுவமடு தொட்டியடி 6 ஆம் படைப்பிரிவின் இலங்கை சிங்க பிரிவின் இராணுவ முகாமுக்கு கிடைத்த தகவலையடுத்து  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களின் உழவு இயந்திரத்துடன்  12 பேரை கைது செய்து தருமபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்திற்கு எந்தவித அனுமதி பாத்திரங்களும் இல்லாத நிலையிலும் மணல் அகழ்வுக்கு அனுமதிகள் வழங்கப்படாத இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை இவ்வாறு  உழவு இயந்திரத்துடன்,  12 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக தருமபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More