Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

1 minutes read

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 

May be an image of 1 person and standing

மேலும் இதற்கடுத்த இடத்தில் கொழும்பு மாவட்டம் காணப்படுவதாக தெரிவித்த அவர் கொரோனாவிலிருந்து  திரிபடைந்த ஒமிக்ரோன் வைரஸினாலேயே பரவல் தீவிரமடைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அறி குறிகள் இல்லாமல் நோயை ஏற்படுத்துதலே ஒமிக்ரோனின் தனித்தன்மையாக கொள்ளப்படினும் அவ்வாறு அறிகுறிகள் தென்படாவிட்டாலும் தொற்றுக்குள்ளானவருக்கோ அல்லது பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ உயிராபத்தும் ஏற்படலாம். நாடு வழமை நிலைமைக்கு திரும்பியதே வைரஸ் பரவல் அதிகரிப்பிற்கு காரணமாகும்.

இதேவேளை வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதமாகவும் ஒட்சீசன் தேவைப்படுவோர் நூற்றுக்கு 8 வீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமையும் தொற்று பரவலை அதிகரிக்கின்றது. 

தற்போதைய நிலையை  கருத்திற்கொண்டு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More