Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை!

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் அசமந்த போக்கு குறித்து ஐ.நா. ஆணையாளர் கவலை!

1 minutes read

இலங்கையின் கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் காணப்படும் அசமந்தப்போக்கே தமது விசனத்திற்கு காரணம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

49 ஆவது கூட்டத்தொடருக்காக இலங்கை தொடர்பில் அவர் முன்வைத்துள்ள அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், இராணுவமயமாக்கல், இன, மத, தேசியவாதம் என்பன ஜனநாயக நிறுவனங்களை சீர்குலைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பாதுகாப்பு துறைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார்.

இருப்பினும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் செய்யப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் சர்வதேச மனித உரிமை பிரகடனங்களுக்கு அமைய போதுமானதாக இல்லை எனவும் மிச்செல் பச்லெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

40 கீழ் ஒன்று தீர்மானத்தின் இணை அனுசரணையில் இருந்து விலகி இரண்டு வருடங்கள் கடந்தாலும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையுடன் கூடிய திட்டமிடல் வரைபை இலங்கை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனிடையே, ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தல்களை பகிரங்கப்படுத்துமாறும் ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More