ஏழு இந்திய மீனவர்கள் கிளிநொச்சி தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் ஏழு பேர் நேற்று இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே கடந்த 13ம் திகதி அதே பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.