Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது

1 minutes read

சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து புலம்பெயர முற்பட்ட 26 பேர் கடற்படையினரால் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம்,வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்ட கடற்படையினர் சந்தேகத்திற்கிடமாக படகொன்று செல்வதை அவதானித்துள்ளதுடன், அதனை சோதனையிட்ட போதே சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்ல முற்பட்ட சந்தேகத்தில் குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 26 பேர் கைது | 26 People Were Arrested

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதிற்கும் உட்பட்ட 04 பெண்களும், அடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், உடுத்துறை, பூநகரி, குடத்தனை, ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் உரிய சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் எனவும் கடற்படை அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More