Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு! – சுமந்திரன் விளாசல்

சமஷ்டியை உச்சரிக்கத் தமிழரசுக் கட்சிக்கே உரித்துண்டு! – சுமந்திரன் விளாசல்

1 minutes read

“சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குத் தமிழரசுக் கட்சியைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை ‘இருள் சூழ்ந்த சுதந்திரம்’ எனப் பிரகடனப்படுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட போராட்டம் மட்டக்களப்பில் இன்று (04) நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் சமஷ்டியைப் பழித்துப் பேசியவர்கள் இன்று அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தாங்கள்தான் சமஷ்டிக்கு உண்மையானவர்கள்; அதற்காகவே போராடினோம் என்று கூறுகின்றார்கள். ஆனால், சமஷ்டி என்பது தமிழரசுக் கட்சியின் கோஷம். அதுவே எமது அரசியல் சித்தாந்தம். எனவே, சமஷ்டி என்ற வார்தையை உச்சரிப்பதற்கு எம்மைத் தவிர வேறு எவருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது.”

இன்று தமிழரசுக் கட்சி தனித்து நிற்பதையும் பலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு விபரம் தெரியாது. அத்துடன் விபரம் தெரியாமல் பல ஊடகங்களும் எம்மை விமர்சிக்கின்றன” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More