Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபாகரன் கடவுளா? – இப்படிக் கேட்கிறார் கோட்டா

பிரபாகரன் கடவுளா? – இப்படிக் கேட்கிறார் கோட்டா

1 minutes read

“உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் வர அவர் என்ன கடவுளா? புலிப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009 இல் எமது படையினர் முடிவுகட்டி விட்டார்கள். போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்?”

– இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் போரின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பணியாற்றியவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரபாகரன் மட்டுமல்ல அவரின் மனைவி, மகள், மூத்த மகன், இளைய மகன் ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள்.

மனநோய் பிடித்தவர்கள் பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்ய முனைகின்ற அதேவேளை, அவர்களில் சிலர் பிரபாகரனை உயிர்ப்பிக்கவும் முயற்சிக்கின்றனர். இந்த மனநோயாளர்களின் கருத்துக்குப் பதிலளிப்பது எமக்குத்தான் வெட்கக்கேடு” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More