Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு!

நீரில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு!

1 minutes read

ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுங்கம, கஹந்தமோதர – முகத்துவாரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கஹந்தமோதர – முகத்துவாரத்துக்கு அருகிலுள்ள கடற்கரையில் பயணித்த மூன்று ரஷ்யர்களில் ஒருவர் முகத்துவாரத்தில் இறங்கிய பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்று விடுதி ஊழியர் ஒருவர் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

ரஷ்ய பிரஜையான செர்பினன் பெட்ஸி என்ற 44 வயதுடைய நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று ஹுங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இந்த ரஷ்ய நாட்டவர் கஹந்தமோதர பிரதேசத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக தனது சகோதரருடன் வசித்து வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், தனது சகோதரனுடனும் மற்றுமொரு ரஷ்ய பெண்ணுடனும் கடற்கரையில் நடந்து சென்ற போதே அவர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார் என்று ஹுங்கம பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More