நீலகிரி மாவட்டம் அரவேனு மற்றும் அளக்கரெ சாலையில் மலை மீது உள்ள பாறை ஒன்றின் மீது சிறுத்தை புலி ஒன்று அமர்ந்து தனக்கு ஏதாவது இறை கிடைக்குமா? என்று உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அடிவாரத்தில் உள்ள சமவெளி பரப்பில் ஆடு,மாடு போன்றவைகள் நடமாடுகின்றனவா என தினசரி நோட்டமிட்டு வருகிறது
அவைகளின் நடமாட்டத்தை கண்டதும் விரைந்து சென்று பாய்ந்து அடித்து தின்றுவிடுகிறது.
கடந்த வாரம் மலை அடிவார ஆற்றுப்படுகையில் அமர்நதுள்ள பெந்தட்டி சிவன் கோயில் வளாகத்தில் வைத்து காட்டு ஆடு ஒன்றை அடித்து தின்றுவிட்டு அதன் தலை பகுதியை விட்டு சென்று உள்ளது.
தகவல் அறிந்த வனதுறையினர் ஆட்டின் தலையை கைப்பற்றி அருகிலுள்ள அரசாங்க வனத்தின் புதைத்ததுடன், பொது மக்களை தனியாக தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.