கொரோனா வைரஸ் ஆரம்பத்திலேயே தடுக்கப்படாததால் தற்போது 184 நாடுகள் நரக வேதனையை சந்தித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா ஆரம்பத்திலேயே வெளியிடாததே இத்தனை உயிரிழப்புகளுக்கும், பொருளாதார சீரழிவுகளுக்கும் காரணம் என அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அமெரிக்க எம்.பிக்கள் பலரும் உற்பத்தி மற்றும் கனிமவளம் போன்ற துறைகளுக்கு சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், கண்களுக்கு புலப்படாத எதிரியான கொரோனாவை முளையிலேயே அழித்திருக்க வேண்டும் என்றும், சீனா அதனை செய்யாததால் 184 நாடுகள் நரக வேதனையை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.