கொரோனா தொற்று காரணமாக அண்மையில் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் காலமானார். இந்திய மக்களால் மாத்திரமின்றி உலகத் தமிழ் மக்களால் மிகவும் விரும்பப்படட பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்ட போதும் காலமானார்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிகாரபூர்வமாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அத்துடன் அதிபர் ட்ரம்பும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
பாமர மக்கள் முதல், பெரும் ஆளும் அதிகார வர்க்கம் வரையில் பாகுபாடின்றி கொரோனா தொற்று பரவி வருகின்றது. உலகின் மிக ஆபத்ததான கொடிய தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோனா திரையுலக பிரபலங்களையும் காவு வாங்கி வருகின்றது. இந்த நிலையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் எதிர்கொண்ட சில அபாயங்களை அமெரிக்க அதிபரும் எதிர்கொண்டிருப்பதை அவதானிக்க முடிக்கின்றது.
இவருவரும் எழுபத்து நான்கு வயதை கொண்டவர்கள். அத்துடன் உடல் பருமன் அதிகரிப்பிலும் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிறையை கொண்டவர்கள். அத்துடன் இருவரும் பல தொற்றா நோய்களை உடலில் கொண்டவர்கள் என்ற வகையிலும் இவருவருக்கும் ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் இந்தியப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை கொரோனாவின் பாதிப்பில் இருந்து இந்திய மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. தற்போது அமெரிக்க அதிபரை இந்த தொற்றிலிருற்து உயிர்காக்க வேண்டிய பாரிய பொறுப்பு அமெரிக்க மருத்துவர்களின் கையில் தங்கியுள்ளது.
உலகில் பெரும் வல்லாதிக்க நாடாக கருதப்படுகின்ற அமெரிக்கா, உலக மக்களுக்கு பல வகையிலும் பல்வேறு உதவிகளை செய்து அரசியல் ரீதியாக பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தமது நாட்டின் அதிபரை காப்பாற்றுவது என்பது அந் நாட்டின் மீதான மருத்துவத்துறை சார்ந்த நம்பிக்கையாக மாத்திரமின்றி அரசியல் மதிப்பாகவும் கொள்ளப்படும்.
இந்த நிலையில் பாடகர் பாலசுப்பிரமணியத்திற்கு ஏற்பட்ட கொரோனா நெருக்கடிகளில் இருந்து அமெரிக்க மருத்துவர்கள் சில விடயங்களை கற்றுக்கொள்ளுவதும் தங்கள் அதிபரை காப்பாற்ற முயல்கின்ற பணிக்கு துணையாக அமையக்கூடும்.
வணக்கம் லண்டன் நிருபர்