தேவையான பொருட்கள்
பச்சரிசி – 250 கிராம்
உளுந்தம் பருப்பு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 75 கிராம்
பச்சை மிளகாய் – 3 எண்ணம்
தேங்காய் – ¼ மூடி (மீடியம் சைஸ்)
எண்ணெய் (பொரித்து எடுக்க) – தேவையான அளவு
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – ¼ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசி, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறு சதுரத் துண்டுகளாக வெட்டவும். பச்சை மிளகாயை கழுவி சிறு துண்டுகளாக வெட்டவும். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். ஊற வைத்த பச்சரிசி மற்றும் உளுந்தம் பருப்பை ஒன்றாகச் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
மாவினைத் தோண்டுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு தேவையான கல் உப்பினைச் சேர்த்து அரைத்துத் தோண்டவும். வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, அலசிய கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிதம் செய்யவும். தாளித்த கலவையை வடைமாவில் கொட்டவும்.
பின் அதனுடன் துருவிய தேங்காய், சதுரமாக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு சேரக் கலக்கவும். வாயகன்ற வாணலியை அடுப்பில் வைத்து பொரிக்கும் எண்ணெயை ஊற்றி காய விடவும்.எண்ணெய் காய்ந்ததும் வடை மாவினை போண்டா போல் உருட்டி எண்ணெயில் போடவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும். சுவையான மசாலா சீயம் தயார்.
நன்றி-தினகரன்