தேவையானவை:
பனீர் – 150 கிராம்
வெங்காயம் – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கஸுரி மேத்தி இலைகள் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்
மல்லித்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
மசாலா செய்முறை:
பனீரைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.ஒரு பானில் (Pan) ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மெதுவாகக் கலந்து கஸுரி மேத்தி இலைகள் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
பனீர் சமோசா செய்முறை:
இப்போது அரை வட்டங்களாக செய்தவற்றில் ஒன்றை எடுத்து ஒரு விளிம்பில் சிறிது தண்ணீர் தடவி மறுபாதி விளிம்பின் மேல் ஒட்டி கூம்பு வடிவில் செய்துகொள்ளவும். பின்னர், அதனுள்ளே தயாரித்த பனீர் கலவையை வைத்து ஓரங்களில் சிறிது தண்ணீர் தடவி ஒட்டிவிடவும். கனமான கடாயில் எண்ணெய்விட்டு குறைவான சூட்டில் வைத்து காயவிடவும். எண்ணெய் லேசாக சூடானதும் தயார் செய்த சமோசாக்களைச் சேர்த்துக் குறைந்த தீயில் வைத்து இடையிடையே கரண்டியால் திருப்பிக்கொண்டே பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
நன்றி -தினகரன்