செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சூப்பரான சிக்கன் 65 பிரியாணி

சூப்பரான சிக்கன் 65 பிரியாணி

1 minutes read

சிக்கன் பிரியாணி என்பது நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவுகளில் ஒன்று. இன்று சிக்கன் 65 பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
புதினா – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 2
லவங்கம் – 5
ஏலக்காய் – 2
பிரியாணி இலை – 4
சீரகம் – 1 டீஸ்பூன்
தயிர் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய், நெய் – தேவைக்கு

சிக்கன் 65 செய்ய

சிக்கன் – 1/2 கிலோ
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
சோளம் மாவு – 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிக்கன் 65 செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து முக்கால் பாகம் வெந்ததும் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிரியாணி அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.

குக்கரில் அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய், நெய் சூடானதும் ஊற்றி பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு கூடவே சீரகம் போட்டு பொரிந்த பின்னர் வெங்காயத்தினை கொட்டி பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

பிறகு அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதனுடன் கொத்தமல்லி தழை, புதினா இலை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரை விடவும். பிறகு, ஊறவைத்த அரிசியை எடுத்து குக்கரில் பரவலாக போடவும். மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து குக்கரை மூடவேண்டும்.

குக்கரில் விசில் வரும் முன்னரே ஸ்டவை ஆப் செய்ய வேண்டும். அப்போதுதான் பிரியாணி குழையாமல் வரும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்தால் சுவையான சிக்கன் 65 பிரியாணி தயார்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.