பிரியாணி என்றாலே நாவூரும் மணமும், சுவையும், சாற்றும் ஒரே நினைவில் வரும். பொதுவாக சிக்கன், மட்டன் பிரியாணி அதிகம் பிரபலமானாலும், உண்மையான அசைவ பிரியர்களின் ‘டாப் லிஸ்ட்’-இல் இடம்பிடித்திருப்பது இறால் பிரியாணி தான்.
இறாலின் இயற்கையான மணமும், மசாலாவின் கமகமப்பும் கலந்து வரும் இந்த பிரியாணி, சரியாக செய்தால் தெருவே மணக்கும் அளவுக்கு சூப்பராக இருக்கும்.
இப்போது வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் இறால் தம் பிரியாணி எப்படி செய்வது என்று படிப்படியாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இறால் – ½ கிலோ
பாஸ்மதி அரிசி – 2 கப்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 2
முந்திரி – 8 முதல் 10
பெரிய வெங்காயம் – 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடி
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
தக்காளி – 3 (நறுக்கப்பட்டது)
பச்சை மிளகாய் – 3
பிரியாணி மசாலா – 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1½ டீஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
1. மசாலா தயார் செய்யுதல்
ஒரு பெரிய குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும்
பிரியாணி இலை, முந்திரி சேர்த்து சிறிது வறுக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
2. கீரை மற்றும் தக்காளி சேர்த்து வதக்குதல்
இப்போது புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து மசாலாவிலிருந்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்கவும்.
3. இறால் மசாலா
சுத்தம் செய்யப்பட்ட இறாலை சேர்த்து 2–3 நிமிடங்கள் கிளறவும்.
பிரியாணி மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து அனைத்தும் இறாலில் நன்கு படும்படி கலக்கவும்.
4. தண்ணீர் & அரிசி சேர்த்தல்
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
5. தம்
மேல் நெய் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி வாசனை கூட்டவும்.
குக்கர் மீது வாழை இலை போட்டு மூடி, அரைமணி நேரம் மெல்லிய தீயில் தம் வைத்து சமைக்கவும்.
அசத்தலான டேஸ்ட்ல இறால் தம் பிரியாணி ரெடி!
மூடியை திறந்தவுடன் வரும் மணமும், இறாலில் ஊறிய மசாலாவின் சுவையும் நிச்சயம் அருமையான ஹோட்டல் ஸ்டைலில் இருக்கும்.