கோடைகால விடுமுறை என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியோர்வரை மிக குதூகலமாக வரவேற்று கொண்டாடுவது வழக்கமானது. குளிரில் நடுங்கி பிள்ளைகளின் கல்வி, பரிட்சை என மன இறுக்கத்துடனும் களைப்புடனும் இருப்பவர்கள் மிக சந்தோசமாக இவ் விடுமுறையை கொண்டாட உள்ளூரிலும் வெளியூரிலும் சுற்றுலா செல்வதுண்டு.
சுற்றுலா என்றாலே நல்ல வெயில் நாளைதான் எல்லோரும் தெரிந்தெடுப்பார்கள். அதிக நேரம் வெயிலில் அலைய வேண்டுமென்றால் எல்லோரும் தங்கள் தலையில் தொப்பிகளை மாட்டிக்கொள்வார்கள்.
தொப்பிகளிலும் எத்தனை எத்தனை விதம் பெண்களிற்கும், குழந்தைகளிற்கும் வண்ண வண்ண தொப்பிகளை அணிவது என்றால் சொல்லவா வேண்டும். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஒரு தொப்பியில் பல விதமான அலங்காரம் செய்து அணிய யாருக்குதான் பிடிக்காது. குறிப்பாக செலவில்லாமல் சிக்கனமாக நவநாகரிகமாக அணிந்தால் அழகுக்கு அழகு சேருமல்லவா?