ஒன்று நூறு…….
மூன்றுக்கு இரு நூறு……
வாராத தலைமுடி…..
புன்னகையில்,,
தெரிந்த சூத்தைப் பற்கள்….
நீலப் பொட்டுச் சட்டை….
பக்கம் மாறாத செருப்பு….
பட்டை தீட்டிய நெற்றி…
வசீகர முகம்…..
இத்தனை அழகுண்டாயினும்
தெருவில் ஏன் அவள் சில ஊதுபத்திகளோடு??…..
பிள்ளை கொஞ்சம் நில்!!!!
ஜயா ஒன்று நூறு…….
மூன்றுக்கு இரு நூறு……
என்னை அறிவாயோ நீ???
நீர் என்ன கடவுளா கண்டவர் உம்மை அறிவதற்கு!!!
உன் பெயர் யாதென்று சொல்???
கணத்தில் கேட்கிறீர்
முடியாது என்று விட்டால் !!!
வயசு உனக்கு பத்தாகுமோ??
ஓ… சரி தான் கொள்ளுங்கள்!!!
உன் அன்னை எங்கிருப்பார்??
“” அநாதை நான்””
அப்படித் தான் கூறச்சொன்னாள்!!!!!
ஒன்று நூறு…..
மூன்றுக்கு இரு நூறு….
இதை எல்லாம் ஏன் கேட்கிறீர்
இப்படியே இவ்வளவும் வாங்குவதற்கோ!!!!!!!
மறுத்தபின் நகர்ந்தாள்…
கொஞ்சம் நில்…!
உன் தந்தை உழைப்பென்ன??
யார் என்று தெரிந்தால்
றோட்டில ஏன் நிற்க நான்!!!!!!
பள்ளிக்கு செல்வதில்லையா நீ???
படிக்க பணம் வேணும் அறீந்திருப்பீர் அதை – வீண் பேச்சுக்கள் !!!!!!
உன் வீடு இங்குண்டோ??
தெருவிலும் உமக்கு தூங்க விருப்பம் போல – என்னைப்போல் !!!!!
நான் படிக்க பணம் தருவேன்
மற்றவர் போல் நீரும் ஏதேனும் கடத்தல் காரரோ……..
ஒன்று நூறு…….
மூன்றுக்கு இரு நூறு……
பிள்ளை கொஞ்சம் நில்!! நாத்திகன்
ஊதுபத்தி வாங்கான்
இந்தப் பணம் உனக்குதவும் பிடி
பிச்சைப் பிழைப்பு எனக்கேன்
என் லாபம் இன்று நாசம்
சற்றே விலகி நில்லும்
வேகமாய் பறக்கிறாள்
சில வேடிக்கை மனிதரைப் போல் நானும்…………….
ஒன்று நூறு…..
மூன்றுக்கு இரு நூறு…….
முல்லையின் ஹர்வி