நிலவு எறிக்கும் வெளியில் இருந்து
பறை ஒன்றினை அறைந்து வரவேற்கிறது ஒரு குழந்தை
ஷெல் விழுந்து
முண்டமாகிப் போன
பனைமரமு
தூரமாய் நின்று
உன்னைத் தேடியே
புல்லாங்குழல் இசைக்கிறது
கூடு திரும்பிய பறவை தன் சோடியை அணைத்து
முத்தமிட்டு சோகமாய் உறங்குகிறது
உன் முகம் காண வேண்டி
நீண்ட நாளாய் அலைந்த களை வியப்பை உற்பவித்து மறைகிறது….
தத்தித்தத்தி
வீட்டு முற்றத்தில்
சின்ன இரை கொத்தும் புலுநீர் குஞ்சுகளும்,
கிளுவை வேலியில் காதல் செய்து மகிழ்ந்து குலாவும் செண்பகப் பறவைகளும்
உன் முகவரி கேட்டுப் போகின்றன…
எறும்புகள் வரிசை மறந்து அலைகின்றன
காகங்கள் கரைந்துவிட
மறந்து போகின்றன
எல்லாமே
உன்னை நினைத்தபடி..
சமரபாகு சீனா உதயகுமார்