எல்லாமே எதுகுமே மாறும் வாழ்வு தான்
இதுக்காக மனிதருக்குள் இத்தனை ஆசையா
இருப்பதெல்லாம் போகும் என்று அறியவில்லையா
இதற்கு தான ஆசைப்பட்டாய் மனிதா
வந்த சொத்து இருக்கும் என்று கனவு கண்டாய்
அது வரும் வழியே போகும் என்று அறியவில்லையா
ஆசை பாசம் எல்லாம் கூட மாறும் வாழ்வு தான்
மூச்சு அடங்கிக் போனா அது சும்மா வேஷம் தான்
முதுமை என்று வந்து விட்டால் முழுதும் அடங்கும்
அட போகும் போது கூட வரும் நாலு தடி தான்
வந்த வழி தெரிகிறது போக வழி இல்லை
எந்த வழி போவதென்று இன்னும் குழப்பம் தான்
பாசமும் பணமும் கூட மாறும் வாழ்வு தான்
இது பகல் இரவு போல வரும் காலம் போலத் தான்
எல்லாமே தெரிந்தவர் போல் சில மனிதர் பேசுவார்
எதுகுமே தெரியாதென்ற சூத்திரம் அறியார்
இளமையும் அழகும் கூட நிரந்தரம் இல்லை
இருக்கும் இந்த அழகு கூட மாறும் நிலை தான்
இலை துளிர்ப்பதும் உதிருவதும் போல வாழ்வு தான்
இது காலம் எழுதும் கதை போல வாழ்வு எல்லவோ
நிரந்தரமே எல்லாம் என்று நினைத்திருந்தாயா
எல்லாமே எதுகுமே கொஞ்சக் காலம் தான்
நமக்கு இருப்பதெல்லாம் மாறும் வாழ்வு தான்
அட நாம கூட காலம் சொல்லும் வாழ்வு தான்
காலம் கூட மாறும் இது கணக்கு போலத் தான்
பூவும் காயும் பூப்பதுவும் உதிர்வதுவும் மாறும் வாழ்வு தான்
காடு கடல் நதியும் கூட மாறும் வாழ்வு தான்
மனிதன் வாழ்வு கூட இயற்கை போலான வாழ்வு தான்
எல்லாமே எதுகுமே நாம் ஆடும் நாடகம் தானே
அந்த நாடகத்தில் நம்ம வாழ்வு கொஞ்சக் காலம் தான்
இது போகு மட்டும் ஆடுவது நம்ம வாழ்வு தான்
இதை போட்டு உடைத்து வாழுவதும் நம்ம வாழ்வு தான்.
பா.உதயன்