முருங்கை இலையில் இருந்து தேநீரும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
கிரீன் தேநீர் பொடி – ஒரு தேக்கரண்டி
புதினா இலைகள் – 4,
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி ,
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முருங்கைக்கீரை பொடி, கிரீன் தேநீர் பொடி, புதினா இலைகள் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின் அதனை இறக்கி எலுமிச்சை சாறு, வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தம்ளரில் ஊற்றி குடிக்கலாம்