கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறை பெற்றதையிட்டு இரண்டாம் ஆண்டு விழா கடந்த 26 ம் திகதி Coventry நகரில் சிறப்பாக நடைபெற்றது. கொவென்ட்ரி தமிழ் சங்கத்தின் நிறுவனர் திரு சண்முகலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
ஒரு தொண்டு நிறுவனத்தின் பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும் எனவும் Kilipeople நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றியும் தனது கருத்துக்களை தெரிவித்தார். எமது சிறார்களின் பல் சுவை நிகழ்வுகளும் நடைபெற்றன. வைத்திய கலாநிதி சதானந்தன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் சுமார் 350 நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.