0
தேசிய கொடியாக மனிதர்கள் அணிவகுத்து நின்று கின்னஸ் சாதனை செய்வது பல நாடுகளில் நடந்துள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானில் 23,300 பேர் ஒரே இடத்தில் கூடி அந்நாட்டு கொடி வடிவில் அணிவகுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
அதைதொடர்ந்து, நேபாளத்தில் 33,300 பேர் கூடி தேசிய கொடி மூலம் அச்சாதனையை முறியடித்தனர்.தற்போது, இதை முறியடிப்பதற்காக சென்னையில் 50 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி தேசிய கொடி வடிவில் நின்று புதிய கின்னஸ் சாதனை படைக்க முடிவெடுத்துள்ளனர்.