தேர்தல் நெருங்குவதால், பதவி பயத்தினால் என்னைப் பற்றி பொய்யான விஷயங்களை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அவிழ்த்து விடுவதாக இலங்கைக்கான நார்வே அமைதிக் குழுவின் தூதராக இருந்த எரிக் சோல்ஹ்ய்ம் குற்றம்சாட்டியுள்ளார்.
சோல்ஹெய்ம் தனது டிவிட்டரில் கூறியுள்ளதாவது, இலங்கையில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், என்னைப் பற்றி பொய்யான விஷயங்களை ராஜபக்ச பரப்பி வருகிறார். திங்களன்று அவரது பொய்க் குற்றச்சாட்டுகளுக்கான பதிலை நான் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்னதாக, இலங்கையில் நார்வேயின் சிறப்பு அமைதிக் குழுவின் தூதவராக இருந்த எரிக் சோல்ஹெய்ம், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ரகசியமாக நிதியுதவி செய்ததாக அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.