படிப்பதற்காக நூல் நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகம் ஒன்று 100 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. கடந்த 1914–ம் ஆண்டு அக்டோபர் 14–ந் தேதி லண்டன் அருகேயுள்ள மோர்பெத் கிரம்மர் பள்ளியில் படித்த ஆல்பர்ட் என்ற மாணவன் ஒரு பாடல் புத்தகத்தை எடுத்தான். பின்னர் ஞாபக மறதியாக திருப்பி கொடுக்கவில்லை.
பின்னர் நார்தும்பர் லேண்ட் பள்ளிக்கு மாறுதலாகி சென்று விட்டான். அந்த புத்தகம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. சமீபத்தில் அவரது மகள் வழிப்பேரன் தன் வீட்டின் பரண் மீது தூசி படிந்து கிடந்த இந்த புத்தகத்தை தேடி கண்டுபிடித்து எடுத்தார். அதை மோர்பெத் கிரம்மர் பள்ளியில் திருப்பி ஒப்படைத்தார்.
மிகவும் காலதாமதமாக வழங்கியதால் நாள் ஒன்றுக்கு 12 பைசா வீதம் அபராதமாக 43 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகம் திரும்ப கிடைத்தற்கு பள்ளி நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. புத்தகம் பழைய நிலையிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளது.