உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா. தற்போது அது பல துறைகளில் முன்னேறி வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதே நேரத்தில் அங்கு வறுமையால் வாடும் மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீனாவில் வறுமையால் வாடும் பகுதிகள் மற்றும் மக்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் 1 லட்சத்து 28 ஆயிரம் கிராமங்கள் வறுமையில் சிக்கி தவிப்பது தெரிய வந்தது. அங்கு வாழும் 9 கோடியே 20 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
இந்த தகவலை வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி துறையின் தலைவர் லியூ யங்பூ தெரிவித்துள்ளார். இருந்தும் சீனாவில் வறுமையில் வாழும் மக்களின் நிலை மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.