பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாதக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 55 பேரின் கருணை மனுக்களை அந்நாட்டு அதிபர் மம்னூன் உசைன் திங்கள்கிழமை நிராகரித்துள்ளார்.
இதையடுத்து, அவர்களுடைய மரண தண்டனை எந்நேரமும் நிறைவேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை இருந்து வந்தது. ஆனால், பெஷாவர் பள்ளித் தாக்குதலுக்குப் பிறகு, இந்தத் தடையை அந்நாட்டு அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து, 6 பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். தற்போது ஐந்நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அளித்த கருணை மனுக்கள் 2012-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன.