இந்தியாவின் ஆட்சேபத்தை அடுத்து, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் குழு தனது செய்திக் குறிப்பில் மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதை மரியாதையுடன் அய்யா (சாஹேப்) என குறிப்பிட்டிருந்த வாசகத்தை நீக்கியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழுவின் தலைவராக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கேரி குயின்லான் என்பவர் உள்ளார். இந்தக் குழுவால், கடந்த 17ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பயங்கரவாதி ஹபீஸ் சயீதை “அய்யா’ என மரியாதையுடன் கேரி குயின்லான் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு இந்தியப்க் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐ.நா.விடம் விளக்கம் கேட்கவும் இந்தியா முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்புந்க் கவுன்சில் குழு சனிக்கிழமை இரவு வெளியிட்ட திருத்தப்பட்ட செய்திக் குறிப்பில், ஹபீஸ் சயீதை “அய்யா’ என குறிப்பிட்ட வாசகம் நீக்கம் செய்யப்பட்டிருந்தது. மேலும், தனது தவறுதலுக்காகவும் அந்தக் குழு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருந்தது.