0
நைஜீரியாவில் வடகிழக்கில் உள்ள கோம்பே நகரில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் பஸ் நிலையத்தில் நேற்று சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் 26 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலில் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகள் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகிற பிப்ரவரி 14–ந்தேதி அங்கு பொது தேர்தல் நடைபெறுகிறது. இப்பகுதியில் தேர்தலை சீர்குலைக்க இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிகிறது