இன்று வேலையில்லாத் திண்டாட்டம்இ வெளிநாட்டு பணப்புளக்கம் போன்றன வடக்கு இளைஞ்ஞர்களை சினிமா கலாசாரத்தை நோக்கி நகர்த்தும் இக்காலகட்டத்தில் புத்தாண்டு பிறந்த சில மணிநேரத்தில் இந்த ஆண்டானது வாழ்வெட்டுடன் எதிரவுகூறி நிக்கிறது அந்தவகையில்
புத்தாண்டு பிறந்து ஒரு சில மணித்தியாலத்திலேயே வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கலைநகர் அளவெட்டி என்னும் இடத்தில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கானார்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.சுரேஸ்குமார் (வயது 25) என்பவரே இவ்வாறு காயமடைந்தவராவார்.
தையல் கடையில் பணிபுரியும் குறிப்பிட்ட இளைஞர் நள்ளிரவு வரை கடையில் பணிபுரிந்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய வேளையில உறவினாகளுக்கு இடையே சண்டை இடம் பெற்றதாகவும் இந்த நேரத்தில் குறிப்பிட்ட இளைஞருக்கும் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிபழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் இன்று அதிகாலை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்