ஜனாதிபதி தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 134 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் இன்று காலை 9 மணியில் இருந்து கொண்டு செல்லப்பட்டன
109705 பேர் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 134 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் 2750 அரச உத்தியோகத்தர்கள் கடமைக்காக நியமிக்கப்பட்டள்ளனர்.
இம் முறை தேர்தலில் 8364 பேர் தபால் மூலமாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 104252 பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இம் முறை 5453 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.