இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தலில் வாக்களிக்கும் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கு ராணுவத்தினர் குவிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையர் மகிந்தா தேசப்பிரியா புதன்கிழமை கூறியதாவது:
வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் ராணுவக் குவிப்பு விதிமுறைகளை மீறும் செயலாகும். இதுகுறித்து ராணுவ தலைமைத் தளபதியிடம் கேட்டபோது, குறிப்பிட்ட பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்புமாறு தான் கட்டளையிடவில்லை எனவும், முக்கியப் பகுதிகளை பாதுகாப்பது ராணுவத்தினருக்கான நிலையான உத்தரவு எனவும் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் தேசப்பிரியா.