வவுனியா ஸ்கந்தபுரத்தில் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பற்றுச்சீட்டு வைத்திருந்த 56 பேருக்கு வாக்களிக்க வாக்குச் சாவடியில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிய வருவதாவது
அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பற்றுச்சீட்டு வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் எனதெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவ்வாறு அனுமதிமறுகப்படும் இடத்து கிராமசேவையாளரின் அனுமதியுடன் வாக்களிக்க முடியும் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லது சாரதிஅனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்றவற்றை பயன்படுத்தி வாக்களிக்கமுடியும் எனத்தெரிவிக்கப்பட்டது. இருந்தும் நடமாடும் சேவையில் வழங்கப்பட்ட இப்பற்றுச்சீட்டுகாரணமாக இந்த 56 பேரும் வாக்களிக்க தகுதியற்றவர்களாக்கப்பட்டுள்ளார்கள் இது தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்படுகிறது.