நாட்டின் 7வது ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல் நாடெங்கும் இடம்பெற்று வரும் வேளையில் வவுனியா மாவட்டத்தில் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றார்கள்.
வவுனியா மாவட்டத்தில விசேடமாக அமைக்கப்பட்டுள்ள 134 வாக்கு சாவடிகளுக்கு சென்று மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றார்கள் நண்பகல் 12 மணிவரை வவுனியாவில் 30 சதவீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளது இவ்வேளையில் அசம்பவிதங்கள் எதுவும் நிகழத வகையில் ஆயுதம் தரித்த பெலிசாரினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.