வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது. எனினும் வீசப்பட்ட குண்டு வெடிக்கவில்லை. இன்று 08-01-2015 பிற்பகல் 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் கைக்குண்டை வீசிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். இதனால் 3.30 மணிக்குப் பின்னரான வாக்களிப்பு பாதிக்கப்பட்டதுடன், வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தை விட்டு குண்டை அகற்றமுடியால் அந்த இடத்திலே செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கென விசேட அதிரடிப் படையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
8