தேர்தல் முடிவுகள் வெளியாகி மைத்திரிபால சிறிசேன ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு செயலாளராக பதவி வகித்த கோத்தபாய ராஜபக்ச தனது மனைவி அயூமாவுடன் மாலைதீவுக்கு தம்பிச் சென்றுள்ளார்.
இன்று காலை விமானப்படைக்குச் சொந்தமான விமானத்திலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ராஜபக்சவின் பிள்ளைகள் சீனாவிற்குச் சென்றுள்ளார்.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகாதபோதும், முடிவுகள் எதிரணி வேட்பாளருக்கு சாதகமாக மாறிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அவசரகாலச் சட்டததை பிரகடனப்படுத்துவதுடன் தேர்தலையும் இரத்துச் செய்வதற்கு மகிந்த ஆலோசனை செய்ததாகவும், ஆனால் மகிந்தவின் முடிவை ஏற்பதற்கு சட்டமா அதிபர் மறுத்துவிட்டா.
இந்நிலையில், தனது முடிவை மாற்றி அதிகாரத்தை சுமூகமான முறையில் கையளிப்பதற்கு மகிந்த முன்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு இதுவே காரணம்…
மகிந்தவின் முடிவை அடுத்து கோத்தபாய சிங்கப்பூருக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தபோதும் விமானப்படை விமானம் தரையிறங்குவதற்கு அந்நாடு அனுமதி மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.