பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 12 பேரை கொன்றனர். அது போன்று இங்கிலாந்திலும் தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் உளவுத்துறையான எம். 15 நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ பார்கஸ் இதை எச்சரிக்கையாக விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும் போது, போக்குவரத்து வாகனங்கள், முக்கிய இடங்கள் மற்றும் பயணிகள் விமானத்தை கடத்தியும் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவிக்க அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர்.
இத்திட்டத்தை இங்கிலாந்து தீவிரவாதிகள் துணையுடன் செயல்படுத்தவும் முடிவு செய்தனர். அவர்கள் சிரியா மற்றும் ஏமனில் தீவிரவாதி பயிற்சி பெற்று திரும்பியவர்கள் ஆவார்.
இது போன்ற எச்சரிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, தீவிரவாதிகள் நடத்திய 3 தாக்குதல்களை இங்கிலாந்து போலீசார் முறியடித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.