இலங்கைக்கான பாப்பரசரின் வருகையை முன்னிட்டு வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இன்று 13-01-2015 மாலை 3.30 மணியளவில் காணாமல் போனோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இன்நிகழ்வில்
அதிவணக்கத்துக்குரிய திருத்தந்தையே தடுப்பக்காவலில் உள்ள எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள்!
திருத்தந்தையே அடிமைப்பட்டுள்ள தமிழ் மக்கள் மீது கருணை காட்டுங்கள் எங்கள் இன விடுதலைக்கு ஆசிர்வதியுங்கள்!
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் உறவுகளை தேடி அலைகிறோம் எங்களக்கு ஆறுதல் தாருங்கள்!
திருத்தந்தையே இறுதிப்போரில் சரணடைந்த எங்கள் கணவர் பிள்ளைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் கேள்வி எழுப்புங்கள்!
அருள்தந்தையே உங்கள் பாதம் படிந்த ஈழமண் விடிவுகாண வேண்டும் பொதுசன வாக்கெடுப்பக்கு பரிந்துரை செய்யுங்கள்!
போன்ற பதாதைகளை தாங்கி நின்றனர். அத்துடன் வவுனியாவிலிருந்து மடுவுக்கு பாப்பரசரிடம் ஆசிபெறவும் தங்கள் பிரச்சனையை தெரிவிக்கவும் புறப்பட்டுச்சென்றனர்.