தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா பஸ்லுல்லாவை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தலிபான், லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தான் தலைவர்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்திய நிலையில், இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பெஷாவரில் ராணுவத்தால் நடத்தப்படும் பள்ளியில் கடந்த மாதம் 16ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150 பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக் குழந்தைகள் ஆவர்.
இந்த சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.