வெளிநாட்டவர்கள் வடக்கு மாகாணத்துக்கு வருபவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறவேண்டும் என விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. இன்று ஜனாதிபதி மைத்திரிபார சிறிசேன தலைமையில் இடம்பெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்திலேயே இந்தக் கட்டுப்பபாடு நீக்கப்பட்டது. வடக்குக்கு வரும் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்திருந்தமையும் இதற்கான சோதனைச்சாவடி வவுனியா ஓமந்தைப் பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது
0