0
வவுனியா மாவட்டத்தில் பல பிரதேசங்களிலும் சமுர்த்தி முத்திரைகளை பெறுவதற்காக மக்கள் தமது அன்றாட தொழிலையும் விடுத்து நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
சமுர்த்தி வங்கிகளில் காலையிலேயே மாதாந்த சமுர்த்தி நிவாரணத்தை பெற்றுவிட்டு கூலித்தொழிலுக்கு செல்லலாம் என வருகை தரும் மக்கள் பல மணி நேரமாக காத்திருந்து நிவாரணத்திற்கான பணத்தை பெறவேண்டியுள்ளமையினால் தொழில் வாய்ப்பையும் இழக்க வேண்டியேற்படுவதாக தெரிவிக்கின்றர்.
குறிப்பாக சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள் மதிய வேளையிலேயே பெரிய வங்கிகளுக்கு சென்று பணத்தை எடுத்து வருவதாகவும் அதன் காரணமாக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கைக்குழந்தைகளுடன் மற்றும் வயோதிபர்களும் இவ்வாறு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கும் மக்கள் வவுனியா வடக்கு பிரதேசத்தில் உள்ள சமுர்த்தி வங்களிலேயே இவ்வாறான நிலை அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.