யாழ்.சுன்னாகம் பகுதியில் கழிவு ஒயில் கசிவினால் சுற்றுச் சூழலில் உருவாகியிருக்கும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் நோக்கிலும் பாதிப்புக்களுக்கு உடனடித் தீர்வினை வழங்கக்கோரியும் சுன்னாகம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக அடையாள உண்ணா விரதப்போராட்டம் 3ம் நாளாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்றைய தினம் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பிரிவினரும் கலந்து கொண்டு உண்ணா விரதப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றனர். நேற்றையதினம் பாடசாலை மாணவர்களால் சுற்றுச் சூழுல் பாதிக்கப்படுவதற்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது