June 8, 2023 6:08 am

பிரிட்டனில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரிப்புபிரிட்டனில் பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரிப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரிட்டனில் சிரியா தொடர்பான பயங்கரவாதக் குற்றச் சாட்டுகளில் கைதாவோர் எண்ணிக்கை ஆறு மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கூறியதாவது:

சிரியாவில் பயங்கரவாதப் பயிற்சி முகாம்களில் பங்கேற்றது, பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி அளித்தது, பயங்கரவாதச் செயல்களுக்காகத் திட்டமிட்டது போன்ற

குற்றங்களுக்காக பிரிட்டன் முழுவதும் 165 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2013-ஆம் ஆண்டு சிரியா தொடர்பான பயங்கரவாதக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 25

பேருடன் ஒப்பிடுகையில், இது 6 மடங்கு அதிகம் என்று தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஹெலன் பால் கூறுகையில், “”இதுவரை இல்லாத மிகப் பெரிய எண்ணிக்கையில் பயங்கரவாதம் தொடர்பான

புலன்விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்