வவுனியா பெரிய உலுக்குளத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் காரணமாக காலில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபில் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலுக்கு இடியன் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்ததுடன் துப்பாக்கி பிரயோகம் நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்த பொலிசார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பந்தமாக எவரையும் பொலிசார் கைதுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.