சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் எஸ். மணியம் வியாழக்கிழமை கூறுகையில், “”14-ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு வரும் மே மாதம் 30-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
தமிழ் மொழியில் கணினிப் பயன்பாடுகளை மேற்கொள்வது, தமிழ் இணையதளம் ஆகியவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.
இந்த மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட கணினி அறிஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.