Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் விசாரணை ஆரம்பம்!: மதுரைக்கு சிறப்புக்குழு வருகை

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் விசாரணை ஆரம்பம்!: மதுரைக்கு சிறப்புக்குழு வருகை

1 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக விசாரணை ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையிலான குழுவினர் டெல்லியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை மதுரை வந்தடைந்துள்ளனர்.

குறித்த விசாரணை ஒக்டோபர் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன் இந்த விசாரணையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் முன்னிலையாவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பின் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்தது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது குறித்த விசாரணையில் ம.தி.மு.க பொதுக் செயலாளர் வைகோ, மற்றும் தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை ஏன் நீக்க வேண்டும் என்பது தொடர்பாக தங்களின் கருத்துகளை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More