செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பெண்ணின் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்கள்!

பெண்ணின் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்கள்!

1 minutes read

சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி சீன மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண், பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார். அப்போது, அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களும் ஆக மொத்தம் 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த அப்பெண் கருதுகிறார்.

அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.