தனது சிறுவயதில் போப் லியோ வாழ்ந்த வீடு சுற்றுலாத்தளமாக மாற்றப்படுகிறது.
சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்ட்டன் என்ற சிறிய ஊரில் 3 அறைகளைக் கொண்ட குறித்த வீடு அமைந்துள்ளது.
போப் லியோவின் பெற்றோர், அந்த வீட்டை 1949ஆம் ஆண்டு வாங்கி, 1996ஆம் ஆண்டு விற்றனர்.
அவ்வீட்டின் தற்போதைய உரிமையாளர் அதை 375,000 அமெரிக்க டொலருக்கு விற்றதாக WGN செய்தி வெள்யிட்டுள்ளது.
அவர் அந்த வீட்டை கடந்த 2024தான் ஆண்டு 66,000 டாலருக்கு வாங்கியுள்ளார்.
டோல்ட்டன் ஊரே குறித்த வீட்டை 375,000 அமெரிக்க டொலருக்கு வாங்கிக்கொண்டு, தற்போது அதை பொதுமக்களுக்கான ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டமிட்டுள்ளது.